Friday, March 1, 2019

உடுவே தம்மாலோக தேரர் ஒரு நிரபராதி - நீதிமன்றம் அறிவிப்பு

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பேரில், உடுவே தம்மாலோக தேரர் கைது கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த யானைக் குட்டியை சட்டவிரோதமான முறையில் விகாரையில் வளர்த்து வந்ததாக, கொழும்பு உலன் மெதினியாராமயவின் விகாராதிபதி தம்மாலோக தேரருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் நீதிமன்றத்தில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின் போதே உடுவே தம்மாலோக தேரர், ஒரு நிரபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com