Friday, March 1, 2019

கடந்த வருட இறுதியில் பிறந்த குழந்தைகளுக்கு, சர்வதேச தரம் வாய்ந்த சிறப்புச் சான்றிதழ்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி, நள்ளிரவு 12 மணியின் பின்னர் பிறந்த சகல பிள்ளைகளுக்கும், சர்வதேச தரம் வாய்ந்த பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் முதற் கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட பத்து பிள்ளைகளுக்கு விசேட பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

அடுத்த கட்டமாக ஏனைய பிள்ளைகளுக்கும் இந்த சர்வதேச தரம் கொண்ட பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com