Friday, March 1, 2019

மனித எச்சங்கள் குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து, அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி வரையில், குறித்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் மன்னார் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாத காரணத்தினால், இந்த வழக்கின் விசாரணைகள் மன்றில் இடம்பெறவில்லை.

இதன் காரணமாக இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com