Friday, March 1, 2019

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையாவது செவிமடுக்கவேண்டும் - அமெரிக்க தூதுவர்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையாவது செவிமடுக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு நல்லிணக்க செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. ஆனாலும், காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

கடந்த காலங்களில் இலங்கை, அமெரிக்கா, ஆகிய இரு நாடுகளுமே ஜனநாயக ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தன. இதன்போது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக கட்சி அல்லது மதம், இனம் என தனிப்பட்ட ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. சுயாதீனமாக செயற்பட்ட நீதித்துறை ஜனநாயகத்தை நிலைநாட்டியது.

ஆகவே தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயக அமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாகவே இரு நாடுகளிலுமுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறமுடியும் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com