Friday, March 1, 2019

மாணவர்களை உள்வாங்கும் திட்டங்களிலும் பாரிய மோசடி - நீதிமன்றம் செல்வேன் - விஜேதாஸ ராஜபக்‌ஷ

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முக்கிய வேலைத்திட்டங்களில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹாபொல பொறுப்பு நிதியம், சீருடை வவுச்சர் வழங்கும் திட்டம் , சுரக்‌ஷா காப்புறுதித் திட்டம் என்பவற்றில் பாரியளவில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட இருப்பதாக அவர் கூறினார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் விஜேதாஸ ராஜபக்‌ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com