Friday, March 1, 2019

நாட்டின் தற்போதைய தேவை பொருளாதார முன்னேற்றமே - பிரதமர்

இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது தொடர்பிலேயே அனைத்து தரப்பினரும் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் வாழ்வின் நிறைவினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் பணி சவாலானதாக இருந்தாலும் கூட, அதனை ஏற்று முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதுவே நாட்டின் தற்போதைய தேவையாகும் எனவும் பிரதமர் கூறினார்.

மேலும் பிளவடைந்துள்ள நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் அரசியல் தீர்வு அவசியமென குறிப்பிட்ட பிரதமர், இதற்காக பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com