Friday, March 1, 2019

வடக்கில் 850 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைக்க நடவடிக்கை

வடக்கில் 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக, வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தமிழ் இளைஞர்கள் யுவதிகளை பொலிஸ் சேவையில் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது கூறினார். இதற்காக வட மாகாணத்தில் 850 தமிழ் பொலிஸார்கள் இணைக்கப்படவுள்ளனர். அவர்கள் 18 வயதிலிருந்து 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகளாக இருக்கவேண்டும்.

நாட்டின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாக இருக்கும் நிலையில் வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் நாட்டில் சேவையாற்றி வருவதாக அவர் கூறினார்.

ஆகவே நாட்டில் பொலிஸாரின் தேவை அதிகம் காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இன்று வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபருடன் சந்திப்பை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், அவரிடம் வடமாகாணத்தில் தேவையாகவுள்ள தமிழ் பொலீசார் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com