Friday, March 1, 2019

மன்னார், மாத்தறை மாவட்டங்களில் கிளைகளை நிறுவ காணாமல் போனோர் அலுவலகம் நடவடிக்கை

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டு கிளைகள் மன்னார், மாத்தறை மாவட்டங்களில் இந்த மாதம் திறக்கப்படவுள்ளன.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரனி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரதான நிகழ்வு இந்த மாதம் 9 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என்பதையும் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com