Friday, March 1, 2019

இம்ரான் கானைப் போல, எமது நாட்டு தலைவர்களும் செயல்பட வேண்டும் - இராதாகிருஷ்ணன்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இருக்கும், மனிதாபிமானமும், பெருந்தன்மையும் இலங்கை அரசியல் தலைவர்களிடம் சற்றேனும் இருந்திருந்தால், இனப்பிரச்சனைக்கான தீர்வு எப்போதோ கிடைத்திருக்கும் என, அமைச்சர் இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதும் காலம் கடக்கவில்லை, இலங்கை அரசியல் தலைவர்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பாட்டால், விரைவில் பிரச்சனைகளுக்கான தீர்வினை எட்டிவிடலாம் என்று இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா கொத்மலை லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டடத்தை இன்று திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றிய போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

தமது எதிரி நாடான இந்தியாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்யக்கூடிய பெருந்தன்மை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இருந்தது. இந்த செயல்பாட்டின் மூலம் சர்வதேச நாடுகளின் வாழ்த்துக்களையும், வரவேற்பையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெற்று விட்டதாக, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com