Thursday, March 7, 2019

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கான போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சட்டத்துறையினருக்கு போக்குவரத்து கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டன. எனினும் அரச மருத்துவ அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவில், எந்தவித அதிகரிப்பும் இடம்பெறவில்லை.

எனவே தமக்கான போக்குவரத்து கொடுப்பனவை உடன் அதிகரிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக, நாடாளுமன்ற செய்திகள் தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com