Thursday, March 7, 2019

கிராம உத்தியோகத்தர்களுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன - வஜிர அபேவர்த்தன

கிராம உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்கியிருப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அவர்களின் அடிப்படைச் சம்பளம் 28 ஆயிரத்து 940 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அலுவலக செலவு போக்குவரத்து செலவு, எழுது கருவிகளுக்கான செலவு என்பனவற்றுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை கிராம உத்தியோகதர்களுக்கு உத்தியோகபூர்வ அறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணிகளை வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள 14 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை ஏழாயிரம் வரை குறைக்க கடந்த அரசாங்கம் முயன்றது. எனினும் அதற்கு எதிராக, ஐக்கிய தேசிய கட்சி குரல் குடுத்து வருவதாக, அமைச்சர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com