Thursday, March 7, 2019

இலங்கை பெண், அமெரிக்காவில் கௌரவிக்கப்படுகின்றார்.

உலகம் முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தலை சிறந்த பத்துப் பெண்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்வு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் ராஜாங்க செயலாளர் மைக் பெம்பியோ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

வருடாந்தம் இந்த விருது வழங்கல் விழா, அமெரிக்க அரசாங்கத்தினால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் இலங்கை சார்பாக மரினி டி லிவேரா விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இந்த நிகழ்வில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப் விசேட உரையாற்றவுள்ளார். சமாதானம், மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், மகளிர் வலுவூட்டல், சமத்துவம் ஆகிய துறைகளுக்கு பங்களிப்பு வழங்கியவர்கள் குறித்த நிகழ்வில், விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் பெண்களையும். சிறுவர்களையும் பாதுகாக்க மகத்தான சேவைகளை ஆற்றி தம்மை அர்ப்பணித்த மரினி டி லிவேராவிற்கு அமெரிக்காவின் மகத்தான விருது கிடைக்கின்றமை, இலங்கையர்கள் மத்தியில் பெரும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com