Thursday, March 7, 2019

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை தரத் தயார் - சந்திரிகா

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக இருந்தால் தன்னுடைய ஒத்துழைப்பு முற்றுமுழுவதுமாக கிடைக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கலென்பிந்துனுவவெ பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போது தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதுதொடர்பான யோசனையை முதலில் கொண்டுவந்ததே தான் என்றும், அதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது அன்றய எதிர்க்கட்சியினர் அதனை நிராகரித்தனர் என்றும் இதன்போது அவர் தெரிவித்தார். அதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில், வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டி பேசினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com