Thursday, March 7, 2019

சட்டவிரோத மதுபான உற்பத்தியா ? -முறையிடுங்கள் - புதிய தொலைபேசி இலக்கம்

நாட்டில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் மதுபானம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், அவற்றை உடனடியாக தெரிவிக்க புதிய விசேட தொலைபேசி இலக்கங்கள் பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ் மா அதிபரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அதன்படி குறித்த சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொலைபேசி இலக்கங்களான 0113 024 820, 0113 024 848, 0113 024 850 என்பவற்றிற்கு முறைப்பாடுகள், தகவல்களை வழங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com