Sunday, March 3, 2019

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், மைத்திரிபால சிறிசேனவே - சுதந்திர கட்சி திட்டவட்டம்

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுவார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கிடையிலான பரந்த கூட்டணி தொடர்பாக, இதுவரை உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

எனினும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிக்க எத்தனித்துள்ள ஏனைய சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணியை அமைக்கும் எண்ணம் தமக்கு உள்ளது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com