Sunday, March 3, 2019

தேங்காய் ஏற்றுமதியின் மூலம், 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது - தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

தேங்காய் ஏற்றுமதியின் மூலம் கடந்த வருடம் மட்டும், 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய், வருமானமாக ஈட்டப்பட்டிருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்த தொகையை இரு மடங்காக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பொருட்டு, புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்த தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த பல வருடங்களில் தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் பவுடர் போன்ற உற்பத்திகள் பாரிய அதிகரிப்பைக் காட்டியுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சைப் பழங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என, திராட்சை பழச் செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தம்மிடமிருந்து ஒரு கிலோ திராட்சை பழம் 750 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், வியாபாரிகள் அதனை சந்தையில் இரண்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், திராட்சை பழச் செய்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தாம் முன்னெடுக்கும் திராட்சை பழச் செய்கை உற்பத்திக்கு, உரிய நிர்ணைய விலையை தருமாறு, திராட்சை பழச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com