Sunday, March 3, 2019

சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான நடவடிக்கைகள், பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் - கரு ஜெயசூரிய

சட்டம் மற்றும் ஒழுங்கிற்காக பாராளுமன்றத்தால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பான காரியாலயத்தின் கிளையொன்று, மாத்தறையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு என்பன ஒருநாட்டின் மிக முக்கியமான விடயங்களாகும். அதனை பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் கடமையாகும். அதன்படி, அவற்றுக்காக பாராளுமன்றத்தில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படும். இந்த நடவடிக்கைக்கு எவரேனும் தடையாக இருந்தால், அவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com