தொழிற்கல்வி குறித்து, இளைஞர்கள் அக்கறை கொள்ள வேண்டும் - கருணாரத்ன பரணவிதான
தொழிற்கல்வி தொடர்பில் இளைஞர் சமுதாயம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டுமென, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். கொடக்கவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
வருடாந்தம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரத்தின் பின்னர் பெருமளவிலான மாணவர்கள் தொழிலையோ, மேற்படிப்பையோ தொடராமல் உள்ளனர். இதன் காரணமாக தமது இளமைப் பருவத்தை இழக்கும் இளைஞர், யுவதிகள் பிற்காலத்தில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே காலம் தாழ்த்தாது, இளைஞர் சமுதாயம், உரிய காலத்தில் தொழிலையோ, மேற்படிப்பையோ தெரிவு செய்து, பொருளாதாரத்தை உயர்திக் கொள்ள வேண்டும் என, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment