Sunday, March 3, 2019

அபிநந்தனின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியானது

அண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, கடந்த தினம் விடுவிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் படி, விமானி அபிநந்தனின் எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையை அண்மித்த போது, விமானி அபிநந்தன் செலுத்தித் சென்ற விமானத்தின் மீது, பாகிஸ்தானிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதன்போது அபிநந்தன் பரசூட்டின் உதவியுடன் கீழே குதித்துள்ளார். இதன்போதே அவருக்கு முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிநந்தனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய அதிகாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அபிநந்தனிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com