ஜனநாயக நாட்டில் மக்கள் வாழமுடியாதுள்ளது. பொலிஸார் கொலைகாரர்களாக மாறியுள்ளனர். மஹிந்தர்
நாட்டில் பொலிஸாரின் செயற்பாடுகளால் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இரு வர்த்தகர்களை கடத்திச் சென்ற பொலிஸார் அவர்களை கொன்று எரித்துள்ளதுடன் அவர்களது சாம்பலைக்கூட எஞ்சவிடவில்லை என்று சாடியுள்ளார். இந்த நிலைமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பெடுக்கவேண்டும் என்றும் இவை 1987 , 88 களில் இடம்பெற்ற வன்செயல்களை ஒத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற வர்த்தக சங்கத்தினருடான சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் தொடர்ந்து பேசுகையில் : சங்கைக்குரிய தேரர்களே! இந்நாட்டில் மக்களின் உயிருக்கு பாரிய அஞ்சுறுத்தல் நிலவுகின்றது. அண்மையில் மனிதன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு காட்டினுள் வீசப்பட்டிருந்தது. அந்த தலையை நாய் ஒன்று கொண்டுவந்தபோதே கொலை விடயம் வெளிவந்தது. அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலையின் பின்னணியில் பொலிஸ் காரன் ஒருவன் இருந்துள்ளது அறியவந்துள்ளது. இவ்வாறு இரு பொலிஸார் இருந்தால் முழுபொலிஸாரினதும் நற்பெயருக்கும களங்கம் ஏற்படுகின்றது.
எமது ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் இந்த அளவில் இருக்கவில்லை. பாதாள உலககுழுக்களை நாம் அழித்திருந்தோம். ஆனால் தற்போது அவர்கள் தலைதூக்கியுள்ளார்கள்.
நாட்டிலே கொக்கைன் பாவிக்கின்ற அமைச்சர்கள் உள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார். இந்த தூள் விவகாரத்தால் அரசாங்கமே தூளாகிச் செல்கின்றது.
0 comments :
Post a Comment