Sunday, March 3, 2019

அதிகார பகிர்வு குறித்து, அடுத்த வாரத்திற்குள், அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடப்படும் - லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டில் அதிகார பகிர்வு குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அதிகார பகிர்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அடுத்த வாரத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி, அதிகார பகிர்வு குறித்து சிறந்த யோசனை ஒன்றை தாம் முன்வப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையிலும், தேர்தல் முறையிலும் பல்வேறு வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றில் எந்த இணக்கப்பாடுகளும் கட்சி ரீதியில் எட்டப்படவில்லை.

எனினும் அதிகார பகிர்வு குறித்து பல கட்சிகள், ஒருமித்த போக்கை காட்டியுள்ளன. இது குறித்து நாடாளுமன்றத்தில் செயல்படும் பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எனவே அதிகார பகிர்வின் அடுத்த கட்டமாக, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, தீர்க்கமான யோசனையொன்றை அடுத்த வாரத்திற்குள் முன்வைப்பதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

கண்டி - கலகெதர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com