Sunday, March 3, 2019

வரவு - செலவு திட்ட தயாரிப்பு பணிகள், இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன - மங்கள சமரவீர

வரவு - செலவு திட்ட தயாரிப்பு பணிகள், முடிவடையும் தருவாயில் உள்ளதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். இந்த பணிகளை விரைவாக நிறைவு செய்ய, மனோ தித்தவெல்ல மற்றும் டெஸ்ஹால் டி மெல் ஆகியோர் தமக்கு பெரிதும் உதவியதாக அமைச்சர் மங்கள குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு பணிகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

இந்த வரவு செலவுத்திட்டத்தில், இலங்கையில் வறுமை கோட்டுக்குள் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்களும் உள்ளடங்கியுள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறும்.

பின்னர் மார்ச் 13ஆம் திகதி முதல், ஏப்ரல் 5 ஆம் திகதி வரை வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறும். அத்துடன் அன்றைய தினமே வரவு - செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com