Tuesday, March 5, 2019

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல இடங்களில் விசேட நிகழ்வுகள் இடம்பெறும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் தின தேசிய நிகழ்வுகள் இம்முறை அனுராதபுரத்தின் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சந்திராணி பண்டார உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அத்துடன் அகில இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மகளிர் அமைப்புக்கள் இந்த தேசிய நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com