Tuesday, March 5, 2019

பொலிஸ் அதிகாரிகளின் சுக, துக்கங்கள் குறித்த விசேட கலந்துரையாடல்

பொலிஸ் அதிகாரிகளின் சுக, துக்கங்களை ஆராய்ந்து அதற்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று பத்தரமுல்ல - சுஹூறுபாயாவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரிவில் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி எச்.எம்.பி.ஹிட்டிசேகர தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் அதிகாரிகளின் சுக துக்கங்களை கேட்டறிந்து அதற்கு தீர்வுகளைக் காணும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி எச்.எம்.பி.ஹிட்டிசேகர தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு தமது கலந்துரையாடலை அடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் சுக, துக்கங்களை விரைவாக நிவர்த்திப்பதற்கான பணிகளை முன்னெடுக்கும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com