Tuesday, March 5, 2019

கொழும்பில் வாழும் வீடற்றவர்களுக்கு, நிலையான மாடி வீட்டுத் திட்டம்

கொழும்பில் வாழும் வீடற்றவர்கள் கௌரவமாக வாழ்வதற்காக எதிர்வரும் 2024ஆம் ஆண்டளவில் நிலையான மாடிவீட்டுத் திட்டமொன்று அமைத்துக் கொடுக்கப்படும் என, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் மத்திய தர வர்க்கத்தினர் வசதியற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களும் அந்த வீட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள் என, அமைச்சர் குறிப்பிட்டார். மத்திய கொழும்பு அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு மெனிங் சந்தைத் தொகுதி அடுத்த வருடம் பேலியகொடவிற்கு மாற்றப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com