Tuesday, March 5, 2019

இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் குறித்த முதலாம் வாசிப்பு, தற்போது ஆரம்பம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் குறித்த முதலாம் வாசிப்பு தற்போது, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கையை முன்வைப்பதற்கான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டிருந்தார். இதன் பிரகாரம் இந்த ஆண்டுக்கான பாதீடு மீதான முதலாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

''மக்களை வலுவூட்டல், மற்றும் ஏழைகளை ஊக்குவித்தல்'' என்ற தொனிப்பொருளில், இந்த ஆண்டுக்கான பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இன்றைய முதலாம் வாசிப்பை அடுத்து, பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் இடம்பெற்று அன்றைய தினமே வாக்கெடுப்பும் நடத்தப்படும். இந்த நடவடிக்கையை அடுத்து மூன்றாம் வாசிப்பும், குழுநிலை விவாதமும் இடம்பெறும் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய பாதீட்டின் படி, மொத்த செலவு 4550 பில்லியன் ரூபாய்களாகும். அத்துடன் மொத்த வருமானமாக 2400 பில்லியன் ரூபாய்கள் கணிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com