Tuesday, March 5, 2019

கிளிநொச்சியில் ஒருவர் கொலை. குடும்பத் தகராறு காரணம்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் இன்று கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார். குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 33 வயதுடைய காந்தலிங்கம் பிரேம ரமணன் என்பவர் என, கண்டறியப்பட்டுள்ளது.

இவர் குடும்ப தகராறு காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுண்டவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் அவரது மைத்துனரே அவரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்த அசம்பாவிதம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com