Tuesday, March 5, 2019

கொழும்பிற்கு செல்லும் ரயிலில் தாமதம் - நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே என்ஜின் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக ரயில் சாரதிகள் நியமனம் இடம்பெற்றுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரம்புக்கனை - கடிகமுக ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்றில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டமையால், கண்டியில் இருந்து கொழும்புக்கு பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படும் என்று ரயில்வே கட்டுப்பட்டுச்சபை அறிவித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com