Friday, March 8, 2019

இலங்கையில் இடம்பெற்ற யுத்த மீறல்களுக்கான விசாரணைகளில், சர்வதேசத்திற்கு இடமில்லை - லக்ஷ்மன் கிரியெல்ல

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த விதிமுறை மீறல்களுக்கான விசாரணைகளில், சர்வதேசம் தலையிடுவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மொழி மூலமான கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்கு இலங்கை வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விடுபடுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன.

இலங்கை இராணுவத்தினருக்காக தற்பொழுது அதிக கரிசனைக் காட்டியவர்கள் அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை சிறைபிடித்ததை ஒருபோதும் மறந்து விட முடியாது.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த உள்ளக விசாரணைக்கான அனைத்துவித ஒத்துழைப்புக்களை எம்மால் வழங்கப்படும். எனினும் சர்வதேச விசாரணைகளுக்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். எனினும் எமக்கான தனித்துவமான அங்கீகாரம் ஒன்று உள்ளது என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com