Friday, March 8, 2019

இராணுவ முகாம், உடன் அகற்றப்பட வேண்டும் - மட்டக்களப்பு மக்கள்

இராணுவம் அமைத்துள்ள முகாம், உடன் அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு முறக்கொட்டான் சேணை இராணுவ முகாமினை அகற்றுமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை உடன் விடுவிக்க வேண்டும் என, பொது மக்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர். இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், இன்றைய தினம் பிற்பகல் குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

முறக்கொட்டான் சேணை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com