Friday, March 8, 2019

லஞ்சம் பெற்ற குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

குற்றப்புலனாய்வு அதிகாரியொருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற போது, நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த குற்ற புலனாய்வு அதிகாரி, காசோலை மோசடி குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு, வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 80000 ரூபாவை கையூட்டலாக பெற்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த அதிகாரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படத்தப்பட்ட போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com