Friday, March 8, 2019

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன

மன்னார் மனித புதைகுழி அக்கவு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் கார்பன் பரிசோதனை அறிக்கையின் மூலம், அவை 500 ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டது.

போர்த்துக்கேயர்களுக்கும், ஒல்லாந்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்களே, மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தொடர்ந்தும் மன்னாரில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் குறித்த அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com