Wednesday, March 13, 2019

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை, எதிர்வரும் ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை, விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்துக்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதன் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்திற்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டது.

இந்தநிலையிலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜூன் மாதம் ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றம் தெரியவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com