Wednesday, March 13, 2019

ஜனாதிபதி அமைச்சர்களுக்கு பிறப்பித்த உத்தரவு - இனி கையடக்க தொலைபேசிக்கு வேலை இல்லை.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அமைச்சர்களுக்கு புதிய தடை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகின்ற அமைச்சர்கள்கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தின்போது தொலைபேசி அழைப்புக்களை எடுப்பது மற்றும் அழைப்புக்களுக்குப் பதிலளிப்பது போன்ற காரணத்துக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை அங்கீகரித்து கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com