Sunday, March 17, 2019

யாழில் போலி பயணச் சீட்டு முகவர். கட்டுநாயக்கவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பயணிகள் யாழ் பொலிஸ் நிலையத்தில்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சுமார் 14 பயணிகள் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக நேற்று யாழ் பொலிஸ் நிலையத்தில் விமான பயணச் சீட்டு முகவர் ஒருவருக்கு எதிராக சுமார் 35 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேசன் பொப்புயூலர் ட்ரவல்ஸ் என்ற பெயரில் யாழ் நகரில் இயங்கி வந்த குறித்த விமான பயணச் சீட்டு முகவரிடம் வீமானச் சீட்டுக்களை வாங்கிய பயணிகளே இவ்வாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பணத்தை பெற்று பயணச் சீட்டுக்களை வழங்கிய முகவர் நிலையம், ஆசனப்பதிவுகளை உறுதி (உழககநைஅ) செய்யாது வழங்கியுள்ளது. இவ்வாறு உறுதி செய்யப்படாமைக்கான காரணம் , முகவர் நிலையம் சம்பந்தப்பட்ட ஏயார் லைன்ஸ் களுக்கு பணத்தை செலுத்தாமையேயாகும் என தெரியவருகின்றது.

இதேநேரம் கடந்த இருவாரங்களாக பயணச் சீட்டுக்களை விற்பனை செய்த பயண முகவர் இறுதி நேரத்தில் வாடிக்கையாளருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் ஆசனத்தை உறுதி செய்ய முடியாது போயுள்ளது. எனவே புதிய விமானச் சீட்டுக்கான பணத்தை செலுத்தி விமானச் சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வழங்கிய பணத்தை ஒரு வார காலத்தில் மீள கையளிக்கின்றோம் என தெரிவித்து பல வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாகவும் அறியக் கிடைக்கின்றது.

இவ்விடயம் சம்பந்தமாக பொலிஸார் பயணச் சீட்டு முகவர் நிலையத்திற்கு சென்றபோது, அதன் உரிமையாளர் இல்லாத நிலையில் அங்கு தொழில்புரிந்த யுவதி ஒருவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.

பிந்தி கிடைத்த தகவல்களின் பிரகாரம் உரிமையாளரான முகிலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com