Sunday, March 17, 2019

தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சரித்திர சான்றுகள், அழிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான பல சான்றுகள் உள்ளன. எனினும் அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்படுவதுடன், அழிக்கப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடராத வண்ணம், அந்த பகுதிகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை சங்கமன் கண்டி பிரதேசத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் எண்ணிலடங்காத பல புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அச் சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அத்துடன் குறித்த பகுதியில் உள்ள சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வேந்தருமான எஸ். பத்மநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்பகுதிகளில் உள்ள இடங்களை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்திய போதும், அவற்றினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com