Sunday, March 17, 2019

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தமைக்கான அனைத்து சாட்சியங்களும் உள்ளன - நீதவான் எம்மா ஆர்புத்நட்

கடந்த வருடம் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்ட பேரணியில் வைத்து, தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பிரிகேடியர் ப்ரியங்க பெனாண்டோ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணை அதிகாரியாக கடமையாற்றிய ப்ரியங்க பெனாண்டோ, கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு சமிக்ஞை காட்டியதாக கூறப்பட்டதுடன், அது குறித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்தன.

இது குறித்து ஏற்கனவே வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு ப்ரியங்க பெனாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது. எனினும் அந்த தீர்ப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு இரத்து செய்யப்பட்டது.

எனினும் மேற்படி வழக்கிற்கு தேவையாகவுள்ள அனைத்து சாட்சியங்களும் தன்னகத்தே உள்ளதாக தெரிவித்த நீதவான் எம்மா ஆர்புத்நட், எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி, இந்த வழக்கு விசாரணைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com