Sunday, March 3, 2019

அநுராதபுரம் வைத்தியசாலையில் தீ - நூதனமான முறையில் லட்சக்கணக்கில் பணத்திருட்டு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மிகவும் நூதனமான முறையில் சுமார் 63 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டடத்தொகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஒருவர் வைத்தியசாலையின் பணப்பெட்டில் இருந்த குறித்த பணத்தொகையை கொள்ளையிட்ட அதேநேரம், வைத்தியசாலையின் முக்கிய ஆவணக்கோப்புக்கள் சிலவற்றையும் தீயில் எரித்து விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் துலான் சமரவீர பொலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com