Sunday, March 3, 2019

இந்தியத் தரப்பில் இருந்து 2200 பேரளவில் கச்சதீவு திருவிழாவிற்கு வர அனுமதி

இலங்கை இந்திய பக்தர்களை இணைக்கும் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் இந்த வருட திருவிழா நிகழ்வுகளுக்கு பக்கதர்களுக்கான சேவையை வழங்கும் பொருட்டு உள்நாட்டு படகுகளுக்கும், மீனவர்களின் வள்ளங்களுக்கும் அனுமதி வழங்குவதற்கு அனுமதி வழங்க, தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா இந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், இந்திய பக்தர்களின் வருகை தொடர்பில் ‘த ஹிந்து’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல மீனவ குழுக்கள் தமக்கான அனுமதியை தமிழக அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வருடா வருடம் முவைத்து வருகின்றபோதிலும், மட்டுப்படுத்தப்பட்ட மீனவர்களும் படகுகளும் இலங்கை இந்திய தரப்பில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறு இருப்பினும் இந்த வருடம் திருவிழாவிற்காக 2,215 யாத்திரிகர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவருவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலில் எத்தனை படகுகளை விடுவிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com