Monday, March 4, 2019

பொலிஸ் விசேட குழு, பங்களாதேஷூக்கு பயணம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொலிஸ் அதிகாரியொருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பங்களாதேஷூக்கு 5 நாட்களை உள்ளடக்கிய பயணம் ஒன்றை மேற்க்கொண்டுள்ளார்கள்.

பொலிஸ் விசேட குழு, அந்நாட்டின் பொலிஸ்மா அதிபர் மற்றும் போதைப்பொருள் பிரிவின் தலைவரையும் சந்திக்கவுள்ளது.அண்மையில் தெஹிவளை – இரத்மலானை பகுதிகளில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலான விசாரணைகளுக்காக குறித்த இருவரும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்று 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயினுடன் பங்களாதேஷ் பெண்ணொருவரும் அனைத்து தொடர்ந்து 31 ஆம் திகதி தெஹிவளையில் 278 கிலோகிராம் ஹெரொயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர், தெஹிவளை – இரத்மலானை பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் 5 பேர் அண்மையில் பங்களாதேஷ் பொலீஸாரினால் கைதாகினர். குறித்த 5 பேரிடம் அந்நாட்டு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதிலும், தற்போது சென்றுள்ள விசாரணையாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்று பொலீசார் கூறுகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com