Thursday, March 7, 2019

மேலும் கால அவகாசம் எதற்கு? இலங்கை வெளிவிவகார அமைச்சு என்ன கூறுகின்றது?

இலங்கை தனது அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டினூடாக, நடைபெற்றுவருகின்ற 40வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரனையுடன் கூடிய உடன்பட்ட ஓர் தீர்மானத்தினூடாக, 30/1 ஒக்டோபர் 01 2015 தீர்மானத்திற்கான கால எல்லையை விஸ்தரிப்பதற்கு, இலங்கை எதிர்பார்க்கின்றது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், இந்த முயற்சி இலங்கையின் நடைமுறைப்படுத்தும் செயன்முறையை சான்றுறுதிப்படுத்துவதோடு, ஐ.நா. மற்றும் இருபக்க பங்குதாரர்களுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டுடன் கூடிய தொடர்ச்சியான அதனது கொள்கையையும் சான்றுறுதிப்படுத்துகின்றது.

2017 பெப்ரவரி-மார்ச் இல் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வில், 30/1 ஒக்டோபர் 01 2015 தீர்மானத்திற்கான கால எல்லையை மேலும் இரண்டு வருடங்களுக்கு அதிகரித்துக் கொள்வதற்காக (அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் மெகடோனியா மொன்டனக்ரோ) முக்கிய குழுக்களுடன் இலங்கை அரசு ஒருங்கிணைந்து செயற்பட்டது.

தொடர்ந்து மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வில் இலங்கை மற்றும் பொது அபிப்பிராயத்தினால் உடன்பட்ட 34/1 மார்ச் 2 2017 தீர்மானத்திற்கேற்ப பேரவையின் 40வது அமர்வில் 3ஃ01 தீர்மானத்தின் நடைமுறை சம்பந்தமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் விரிவான ஓர் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பணிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் செயற்பாடு மார்ச் 20/ 2019 அன்று பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற இந்த அறிக்கையை முழுமையாக தழுவியதாகவே இருக்கின்றது. இப்பின்னணியில் உடன்பட்ட ஓர் தீர்மானத்தினூடாக மேலதிக இரண்டு வருடங்கள் கால எல்லை அவசியப்படுகின்றது.

மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதும் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுக்களில் கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் ஐக்கிய இராச்சியம் பிரதானம் வகிக்கின்றது.

எனவே இந்த உடன்பட்ட தீர்மானத்தில் இலங்கை முக்கிய குழுக்களின் தலைவரான ஐக்கிய இராச்சியத்துடன் கைகோர்க்கின்றது. இந்த மூலோபாயமானது பலமான நடைமுறைப்படுத்தல் செயன்முறையினூடாக இலங்கையர்களுக்கெதிராக தொடர்ந்து வளர்ந்து வந்த சர்வதேச போர்க்குற்றங்களை தடுக்கும்.

2015 இன் தீர்மானம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளும் 2009ம் ஆண்டு இலங்கையை தரிசித்த ஐ.நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அர்ப்பணிப்புக்களின் ஓர் விளைவாகும்.

கீழ்வருவது 2009 இல் இலங்கைக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விஜயத்தின் முடிவில் இலங்கை அரசு மற்றும் ஐ.நா ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வமான அறிக்கையின் கடைசிப் பந்தியாகும்.

சர்வதேச மனித உரிமைகள் படித்தரங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச கடமைகள் என்பவற்றை பாதுகாப்பதோடு, இலங்கை அதனது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் அதன் உறுதியான அர்ப்பணிப்புக்களை மீள வலியுறுத்துகின்றது.

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தை மீறுவதற்கான பொறுப்புணர்வுச் செயன்முறையின் முக்கியத்துவத்தினை செயலாளர் நாயகம் கோடிட்டுக் காட்டினார்.

அரசாங்கம் அக்குற்றச்சாட்டுக்களை நிவர்த்திப்பதற்கான அளவீடுகளை மேற்கொள்ளும்.

காணமல் போனோர் அலுவலகத்தினை ஸ்தாபித்தமை இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உருவாக்கும் நோக்கில் நஷ்டஈட்டுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தமை சுதந்திர ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தமை மற்றும் தகவல் அறியும் உரிமை உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவந்தமை போன்ற பல்வேறு உறுதியான எட்டுக்களை கடந்த சில வருடங்களில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது.

இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் உள்ளடங்களாக பல பொருளாதார இலாபங்களை இலங்கை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகுத்தது. தொடர்கின்ற செயன்முறைகளை வலுப்படுத்துவதற்காக இன்னும் சில சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. முற்றுமுழுதுமான நல்லிணக்க செயன்முறை இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

போர் வீர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தவர்கள் மேற்கு ஆபிரிக்காவின் ஓர் மாநிலமான மாலி மற்றும் ஏனைய இடங்களில் சமாதானத்தை காக்க தற்போது எமது படைவீரர்கள் ஈடுபட்டிருப்பதனை மிக இலகுவாக மறந்து விட்டார்கள்.

இது எமது உடன்பட்ட தீர்மானத்தின் மூலம் சாத்தியமாகியது.

மேலும் இலங்கை படைவீரர்களுக்கான அதிக பயிற்றுவிப்பு வாய்ப்புக்களோடு சர்சதேசத்திற்கும் இராணுவத்திற்குமிடையிலான ஒத்துழைப்பு விரிவாக்கப்பட்டது. மனித உரிமைகள் பேரவையின் செயன்முறையினூடாக எமது போர் வீரர்கள் புகழ் பாதுகாக்கப்பட்டதோடு சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் பெறப்பட்டது. அண்மையில் சமாதானம் காத்த எமது இரு படைவீரர்களின் இறுதிச்சடங்குகளின் போது இதனை எம்மால் உணர முடிந்தது.

இந்த உருண்ட தீர்மானத்தின் வரைபு கடந்த வருடம் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நிலமையை சமாதான முறையில் தீர்ப்பதில் ஜனநாயக நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட உறுதிமிக்க செயற்பாட்டை பறைசாற்றுகின்றது. அது எமது தேசிய நிறுவனங்களின் சுதந்திரம் நம்பகத்தன்மை மற்றும் நெகிழ்திறன் என்பவற்றுக்கான உறுதியான சாட்சியமாகும்.

இலங்கை அரசின் உடன்பட்ட உருண்ட தீர்மானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொது மக்களை பிழையான முறையில் வழிநடாத்துவதற்கும் அரசியல் இலாபங்களுக்காகவும் மேற்கொள்ளப்பட்டவையே.

எனினும், 2015ம் ஆண்டு அரசு எப்படி ஆட்சிக்கு வந்தது என்றும் அந்நேரம் உடன்பட்ட தீர்மானத்தின் மூலம் மிகப்பெறும் பேரழிவை தடுப்பதற்கு அது எவ்வாறு உதவியது என்றும் இந்நாட்டு பொது மக்கள் மிகவும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

தற்போதைய முயற்சி ஒன்றுமில்லை. மாறாக நல்லிணக்க சமாதான தேசிய ஒருமைப்பாடு சாரந்த அம்சங்களுக்காக இலங்கை அரசாங்கம் இன்னும் மேலதிக நேரம் எதிர்பார்க்கின்றது.

எனினும் 2018 ஒக்டோபர் 26 இன் அரசியலமைப்பு சதியின் காரணமாக சில அவசியமான சட்டவிடயங்களை இலங்கை அரசால் முடிவெடுக்க முடியாமல் போனது. நாடு மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலைமையில் வெட்கமின்றி அற்பமான அரசியல் இலாபங்களை அடைய முனையும் இவர்கள்தான் நம் தாய் நாட்டின் உண்மையான துரோகிகள் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com