Thursday, March 7, 2019

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் காலம் நீடிப்பு

இன்றுடன் நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் காலம் , எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி
ஆணைக்குழுவிற்கு, இதுவரை 450க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றில் 270 முறைபாடுகளில் 15 முறைப்பாடுகள், ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக, விசேட பொலிஸ் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவை, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com