Thursday, March 7, 2019

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு விசேட அவதான எச்சரிக்கை

இன்று நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என, காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், நிழலான இடங்களில் தங்குமாறும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளதாகக் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், வீட்டிலுள்ள முதியோர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. அதேபோன்று சிறுவர்களையும் மிகவும் அவதானத்துடன் கவனிக்குமாறு காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதிக வெப்பம் உள்ள இடங்கள், வெட்டையான பகுதிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடுமையான வெப்பம் காரணமாக, தோல் தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளமையினால், வெப்பமான பகுதிகளில் வசிப்போர், சிறுவர்களுக்கு அதிக நீர் அருந்தக் கொடுப்பதுடன், வெப்பநிலைமைக்கு ஏற்றவாறான ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்றும் சிறுவர் விசேட மருத்துவ அதிகாரி தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com