Thursday, March 7, 2019

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேர் விடுதலை - கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் இன்று உத்தரவு

அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரையும் விடுவிக்க, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற குற்றம் தொடர்பிலான வழக்கை விசாரிப்பதற்கு, கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற காரணத்தால் குறித்த எழுவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கு நீதிபதிகள், சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் ஆட்சேபனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com