Friday, March 15, 2019

போலி வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் நிலையம் முற்றுகை. இருவர் கைது! ஆவனங்கள் மீட்பு!

ஜப்பானில் சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, பொது மக்களை ஏமாற்றி, பாரிய நிதிமோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் ஒன்று, சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் றோயல் பிளாசா வில் இயங்கி வந்த குறித்த நிறுவனத்தை நேற்று 14 ம் திகதி சுற்றிவளைத்த அதிகாரிகள் குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு களை கைது செய்துள்ளனர். இவர்கள் பொலன்னறுவை மற்றும் தலங்கம முதலான பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனைக்கும் தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 13 வீசாக்கள் உள்ளிட்ட பத்திரங்கள் பல மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை நம்பி, பொதுமக்கள் பலர் பெருந்தொகையான பணத்தொகையை கொடுத்து, ஏமாந்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையின் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com