Friday, March 15, 2019

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இடம்பிடித்து, இலங்கைக்கு பெயர் பெற்றுத்தந்த தமிழர்கள்.

சர்வதேச காவல்துறையான இன்டர்போல் வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இலங்கை தமிழர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில், இலங்கையின் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர் எமில் காந்தனும் உள்ளடக்கின்றார். மொத்தமாக இந்த பட்டியலில் 14 இலங்கையர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் தழிழர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டவர்கள், இலங்கை காவல்துறை மற்றும் சர்வதேச காவல்துறை அதிகாரிகளால் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றவர்கள் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டவர்கள் என, சர்வதேச காவல்துறையான இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com