அரசுடன் ஒத்துழைக்காவிடின், பயங்கரமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் - மக்களுக்கு விழிப்பூட்டும் சுமந்திரன்
தமிழ் மக்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், அரசுடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
விரும்பியோ, விரும்பாமலோ தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவ்வாறன்றி இந்த அரசாங்கத்தை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்களாயின், கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற, யாரும் எதிர்பார்த்திராத சம்பவம் ஒன்று மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
இந்த விடயத்தை புரிந்து கொண்டு, பிரச்சனைகளில் இருந்து விடுபட, நாம் அனைவரும் இந்த அரசுக்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படவில்லை.
எங்கள் மக்களுக்கு ஆதரவாகவே நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
1 comments :
Hey there are using Wordpress for your blog platform? I'm new to the blog
world but I'm trying to get started and create my own. Do you
need any html coding expertise to make your own blog?
Any help would be greatly appreciated!
Post a Comment