Monday, March 4, 2019

மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க, உரிய நடவடிக்கை ஆரம்பம் - கல்யாணி ஹேவா பத்திரன

மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேரையும் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி திணைக்களத்தின் வழிநடத்தல் பணிப்பாளர் கல்யாணி ஹேவா பத்திரன தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் இருந்து இரண்டு படகுகளில் தொழிலுக்காக சென்ற இவர்கள், மாலைதீவு கடல் எல்லையில் அத்துமீறிய நிலையில் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மீனவர்கள் குறித்த தகவல்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக மாலைதீவில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, வழிநடத்தல் பணிப்பாளர் தெரிவித்தார். குறித்த மீனவர்கள் தாய்நாட்டுக்க திரும்பியவுடன் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com