Monday, March 4, 2019

பொகவந்தலாவை தோட்ட குடியிருப்பு இடிந்து வீழ்ந்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை

பொகவந்தலாவ டின்சின் தோட்டப்பகுதியில், 15ஆம் இலக்க லயன் குடியிருப்பின் ஒரு பகுதி, சரிந்து விழுந்துள்ள போதும் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குடியிருப்பாளர்கள்; கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் குடியிருப்பு தாழிறக்கம் காரணமாக, அதில் வசித்து வந்த 12 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தில் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, குடியிருப்பிலுள்ள மக்கள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com