Monday, March 4, 2019

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் காலம், எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையும்.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற கருதப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் காலம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இன்று வரையில் இந்த ஆணைக்குழுவிற்கு 295 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதியில் இருந்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்து, குறித்த ஆணைக்குழு தமது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com